top of page

இதர கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள்

TNPSC பயிற்சி வகுப்பு

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாடு அரசு வேலை வேண்டுவோருக்காக போட்டித் தேர்வில் வெற்றிபெற எமது ஏனாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், பிரத்யோகமாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இப் பயிற்சியை தன்னார்வத்துடன் பல்வேறு அரசுத் தேர்வுகளில் தேர்சிப்பெற்ற அனுபவமிக்க இக்கிராமத்து இளைஞர்களாலும், சிறப்பு ஆசிரியர்களாலும் எந்தவித கட்டணமும் இன்றி நடத்தி வருகின்றனர்.

 

இப்பயிற்சி பற்றி மேலும் விவரங்களுக்கு: +91 867 595 00 66

 

ஸ்ரீ சங்கரா சமுதாயக் கல்லூரி

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழிற் கல்வி இயக்ககத்தின் அங்கிகாரத்துடன் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு எவ்வித் கட்டணமுமின்றி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் எலக்ட்ரிஷியன், தையல், செல்ஃபோன் மற்றும் டிவி மெக்கானிக் போன்ற பல தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

உழவர் பயிற்சி மையம்

காஞ்சிபுரம்- ஏனாத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது உழவர் பயிற்சிமையம். இங்கு உழவர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்பொழுது கால்நடைவளர்ப்பு, செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மற்றும்  விவசாயம் தொடர்பான சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் அனைத்தும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கி வருகிறது.

.

 

இங்கு நடைபெரும் பயிற்சி விவரங்களுக்கு: 044 - 2726 4019

நந்தனார் பயிற்சிமையம்

சிரமத்திற்கு வருந்துகிறோம்! இப் பக்கம் இன்னும் முழுமைப் பெறவில்லை

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”.

-பாரதி

bottom of page