கல்வி நிறுவனங்கள்
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
“கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று சிறப்புடையது காஞ்சிபுரம். இக் காஞ்சிபுர வட்டத்தில் அமைந்துள்ள பல தரம் வாய்ந்த கல்விநிறுவன்ங்கள் இக்கிராமத்தில் அமைந்துள்ளது. இதில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்களால், ஸ்ரீ ஆதி சங்கரர் பெயரால் 1991 ல் துவங்கப்பட்ட ஸ்ரீ சங்கரா கலை ம்றறும் அறிவியல் கல்லூரிக்கு முக்கிய இடம் உண்டு.
இங்கு பலவிதமான பாடத்திட்டங்கள் நடத்தப்படுவதோடு. சுய தொழில் பயிற்சியும் அரசாங்க அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. இக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் இக் கிராமத்திற்கு பல நல்ல பணிகளும் செய்து வருகின்றனர்.
இக் கல்லூரியைப் பற்றி மேலும் அறிய அதிகாரபூர்வ இணையத்தைக் காணவும்.
ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா ஒரு பல்கலைக் கழகமாகும். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் அருளாசியுடனும், 1993 ம் ஆண்டு நிகர் நிலைப் பல்கலைக்கழகமாக தோற்றுவிக்கப்பட்ட்து.
இப் பல்கலைக்கழகம் பற்றி மேலும் அறிய அதிகாரபூர்வ இணையத்தைக் காணவும்.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி
இம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையில்(NH45) அமைந்துள்ளது. இது 2001 ம் ஆண்டு முதல் செயல்படுகிறது.
இம் மருத்துவ கல்லூரியைப் பற்றி மேலும் அறிய அதிகாரபூர்வ இணையத்தைக் காணவும்.
பல்நோக்கு சமூக சேவை சங்கம், ஏனாத்தூர்
ENATHUR MULTIPURPOSE SOCIAL SERVICE SOCIETY