செய்திகள்
ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு விழா
ஏனாத்தூர் ஜூன் 10, 2013
ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக தேர்வெழுதி 93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதைப்பாராட்டி ஊரட்சித் தலைவர் இரா.பார்வதி இராஜகோபால் முன்னிலையில், ஏனாத்தூர் பல்நோக்கு பொதுநல சமூக சேவைச் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள்,சங்க உறுப்பினைகள், மற்றும் கிராமமக்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.
சட்ட அறிவு மற்றும் விழிப்புணர்வு முகாம்
ஏனாத்தூர் ஜனவரி 30, 2013
கிராம மக்கள் சட்ட அறிவு பெறும் பெரும்வகையில்,காஞ்சிபுரம் வட்ட சட்டப்ப்ணிகள் குழுவும், ஏனாத்தூர் பல்நோக்கு பொதுநல சமூக சேவைச் சங்கமும் இனைந்து, சட்ட அறிவு மற்றும் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதில் ஊரட்சிமன்ற தலைவர் திருமதி. இரா.பார்வதி இராஜகோபால்,வ.ச.ப. தலைவர் மற்றும் சார்பு நீதிபதி திரு.M.P.ராம்,கூ.மா.உரிமையியல் நீதிபதி திரு. J.பாரதி,குற்றவியல் நீதித்துரை நடுவர் திரு.ரொஸ்லின் துரை, மற்றும் பல வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு இக் குழுவின் செயல்பாடுகளை விளக்கியதோடு, முகாமிலேயே மனுக்கள் பெற்று மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும், ஆலோசனைகளையும் அளித்தனர்.
பல்நோக்கு சமூக சேவை சங்கம், ஏனாத்தூர்
ENATHUR MULTIPURPOSE SOCIAL SERVICE SOCIETY