பல்நோக்கு பொதுநல சமுதாய சேவை சங்கதின் நிர்வாகக்குழு மாற்றம்
ஏனாத்தூர் ஆகஸ்டு 11, 2013
பல்நோக்கு பொதுநல சமுதாய சேவை சங்கதின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் தற்போது பொறுப்பில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதியுடன் பதவிகாலம் நிறைவுபெற்றதாக ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் செப்டம்பர் 08 அன்று நிர்வாக குழுவைத் தேர்ந்தெடுப்பதெனவும், அதுவரை நிர்வாகிகள் தங்களின் பணியை தொடரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
EMPSS இன் மாதாந்திர பொதுக்கூட்டம்
ஏனாத்தூர் ஆகஸ்டு 11, 2013
பல்நோக்கு பொதுநல சமுதாய சேவை சங்கதின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் கோ.அருமைநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.இதில்,
1.சங்க உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டுமணி நேரமாவது களப்பணியாற்றிட வேண்டும்.
2.கிராமசசபைக் கூட்டங்களில் சங்க உறுப்பினர்கள் தவறமல் பங்குகொள்ளவேண்டும்.
3.கிராம மக்களுக்கு இரத்தமாதிரியை கண்டறியும் இரத்த சோதனை முகாம் நடத்த வேண்டும்.
4.புதிய நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
5.கிராமத்தின் விளையாட்டுத்திடலை அடையாளம் கண்டு அதைப் பராமரிக்கவேண்டும்.
6. சங்கத்திற்கு நிரந்தர அலுவலகம் அமைத்திடவேண்டும்.
என பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.
ஸ்ரீ சங்கரா சமுதாயக் கல்லூரியின் இலவசத் தொழிற் பயிற்சி சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.
ஏனாத்தூர் அக்டோபர் 01, 2013
பல்நோக்கு சமூக சேவை சங்கம், ஏனாத்தூர்
ENATHUR MULTIPURPOSE SOCIAL SERVICE SOCIETY